எரிவாயு தட்டுப்பாடு காரணமாக மறு அறிவித்தல் வரை எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படாது என்றும் மக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டாம் எனவும் லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இன்று 16,000 எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்ட பின்னர், அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும் எரிவாயு விநியோகம் பெரும்பாலும் எதிர்வரும் செவ்வாய்கிழமை மீண்டும் ஆரம்பமாகும் என லிட்ரோ நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் நம்பிக்கை வெளியிட்டார்.