Our Feeds


Friday, June 3, 2022

ShortNews

JUST_IN: ஆபத்தை எதிர்நோக்கும் அரச மருத்துவமனைகள்! - சிறுவர் மருத்துவமனை பால் தேநீரும் இடைநிறுத்தம்.



அரச வைத்தியசாலைகளில் நோயாளர்கள் மற்றும் பணிக்குழாமினருக்கு ஒரு நேர உணவுக்காக வழங்கப்படும் இறைச்சி, மீன் மற்றும் முட்டை என்பன தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


கொழும்பு தேசிய வைத்தியசாலை, களுபோவிலை போதனா வைத்தியசாலை மற்றும் மஹரகம அபேக்ஷா உள்ளிட்ட வைத்தியசாலைகளிலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு ரிச்வே சிறுவர் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் சிறுவர்களுக்கு காலை நேரம் வழங்கப்படும் பால் தேநீரும் நிறுத்தப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »