Our Feeds


Wednesday, June 15, 2022

SHAHNI RAMEES

BREAKING: தெஹிவளையில் திடீரென குவிக்கப்பட்ட இராணுவம்




நாட்டில் கடந்த சில மாதங்களாக எரிபொருளுக்கு கடும்

தட்டுப்பாடு நிலவி வருகின்றது.


இந்நிலையில், எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் மக்கள் தொடர்ந்து வரிசையில் காத்திருக்கின்றனர்.


இவ்வாறான நிலையில் சற்றுமுன் எரிபொருள் வழங்குமாறு கோரி தெஹிவளையில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.


ஆர்ப்பாட்டக்காரர்கள் காலி வீதியை மறித்து போராட்டத்தை முன்னெடுப்பதால், கொழும்பு- காலி வீதியில் இரு பக்கங்களிலும் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.


தற்போது குறித்த பகுதியில் ஏராளமான பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »