அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தி ஒரு வாரத்திற்கு நாடாளுமன்ற அமர்வுகளை புறக்கணிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு அக்கட்சி இதனைத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்து மபண்டார, நாடாளுமன்ற அமர்வுகளை இன்று முதல் புறக்கணிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளோம்.
தாங்கள் நாடாளுமன்றத்திற்கு வந்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை,மேலும் வரும் நாட்கள் மற்றும் வாரங்கள் கடுமையானவையாக இருக்கும் என்ற அரசாங்கத்தின் எச்சரிப்பைக் கேட்க தாங்கள் விரும்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் குறித்து அரசாங்கம் சரியான உத்தரவாதத்தை வழங்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.