இலங்கையில் நாளை காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை, நாடு தழுவிய அளவில் “வாகனப் போராட்டம்” நடத்துவது குறித்து கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
“நாளைய எதிர்ப்பு போராட்டம் அனைத்து வாகனங்களையும் வீதிகளில் நிறுத்துமாறு அழைப்பு விடுக்கிறது. இந்த நடவடிக்கையானது வீதி நெரிசலை ஏற்படுத்தும்” என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இலங்கையில் உள்ள அமெரிக்க பிரஜைகளுக்கான பயண எச்சரிக்கையில் தெரிவித்துள்ளது.