ஈரானில் இடம்பெற்ற ரயில் விபத்தில் குறைந்தபட்சம் 17 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 37 பேர் காயமடைந்துள்ளனர்.
தேபாஸ் நகரில் இன்று புதன்கிழமை அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஈரானிய ரயில்வே சேவை அவசர சேவைப் பிரிவின் பேச்சாளர் மொஜ்தபா கலேதி இது தொடர்பாக கூறுகையில்,
இவ்விபத்தில் 17 பேர் பலியானதுடன் 37 பேர் காயமடைந்து வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். சம்பவ இடத்துக்கு 24 அம்பியூலன்ஸுகள், 3 ஹெலிகொப்டர்கள் அனுப்பப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்தார்.
காயமடைந்த பலர் ஆபத்தான நிலையில் உள்ளதால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஈரானிய ரயில்வே திணைக்களத்தின் பிரதித் தவைர் மீர் ஹசன் மௌசவி இது தொடர்பாக கூறுகையில், ரயில் பாதைக்கு அருகிலிருந்த அகழ்வு இயந்திர வாகன மொன்றுடன் ரயில் மோதியபின் அது தடம் புரண்டதாகக் கூறினார். இந்த ரயிலில் 348 பேர் பயணம் செய்துகொண்டிருந்ததாகவும் அவர் கூறினார்.