“ரட்டா” எனப்படும் ரதிந்து சேனாரத்ன மற்றும் லஹிரு வீரசேகர ஆகியோர் மருதானை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.
மே 9 மற்றும் 10ஆம் திகதிகளில் கோட்டை மற்றும் தலங்கம ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் தொடர்பில் குறித்த இருவரும் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், இன்றைய தினம் குறித்த இருவரும் மருதானை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.