Our Feeds


Saturday, June 18, 2022

ShortTalk

VIDEO: நடு வீதியில் பவுசரிலிருந்து பெட்ரோல் வழங்கிய விவகாரம் - விசாரனைகளை ஆரம்பித்தது IOC



எரிபொருளை ஏற்றிச் செல்லும் பவுஸர்களிலிருந்து சட்டவிரோதமாக எரிபொருளை இறக்கியமை தொடர்பில் சமூக ஊடகங்களில் பதிவாகியுள்ள மூன்று சம்பவங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.


இதன்படி, சிபெட்கோ மற்றும் லங்கா ஐஓசி ஆகிய மூன்று பவுஸர்களின் அனுமதிப்பத்திரங்கள் விசாரணைகள் முடியும் வரை உடனடியாக இடைநிறுத்தப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்து அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதேவேளை, பம்பலப்பிட்டி, மரைன் டிரைவ் வீதியில் எரிபொருள் ஏற்றிச் செல்லும் பவுஸர் ஒன்றிலிருந்து காருக்கு எரிபொருளை கலன்களில் வழங்கியமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக ஐஓசி அறிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »