பாராளுமன்றத்தில் நாளை இடம்பெறவுள்ள ஜனாதிபதி தெரிவுக்கான வாக்கெடுப்பில் டலஸ் அழகப்பெருமவை ஆதரிப்பதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவை தீர்மானித்துள்ளன.
நுகேகொடையில் இடம்பெற்ற கட்சிக் கூட்டத்துக்கு பின்னர், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் அறிவித்துள்ளார்.
இதேவேளை, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் டலஸ் அழகப்பெருமவை ஆதரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் நிஸாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.