அத்துடன் கட்சியின் செயலாளரிடம் இது தொடர்பில் 6 கேள்விகளை கேட்டிருந்தேன். இதுவரை அவர் அதற்கு பதிலளிக்கவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தவிசாளர் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (19) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஆறு கேள்விகளை பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரிய வசத்திடம் கேட்டிருந்தேன்.
அதற்கு அவர் எந்தவித பதிலையும் வழங்கவில்லை. நான் தெரிவித்துள்ள கருத்தை அவர் நிராகரிப்பதாக தெரிவித்துள்ளார்.
அவர் நிராகரிப்பதற்கு நான் கருத்து தெரிவிக்கவில்லை. கேள்விகளையே கேட்டிருந்தேன்.இதுவரை அவர் அதற்கு பதில் வழங்கவில்லை என்பதே உண்மை என்றார்.