Our Feeds


Wednesday, July 6, 2022

SHAHNI RAMEES

“பயப்பட வேண்டாம், நான் மீண்டும் வருவேன்” மஹிந்த அதிரடி


 நான் மீண்டும் அரசியல் நடவடிக்கைகளைத் தொடங்குவேன். எதற்கும் பயப்பட வேண்டாமென முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

உடல்நிலை மோசமாகி தீவிர சிகிச்சைப் பிரிவிலுள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, நேற்று பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் பங்கேற்றார்.

இதன் போது கருத்து வெளியிட்ட மஹிந்த ராஜபக்‌ஷ, தனது மீள் அரசியல் பிரவேசம் குறித்து தகவல் வெளியிட்டுள்ளார்.

மே மாதம் 09ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட கலவரத்தின் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை இராஜினாமா செய்து அரசியல் நடவடிக்கையிலிருந்து ஒதுங்கியிருந்தார். எனினும் மீண்டும் அரசியல் பணிகளை ஆரம்பித்துள்ளதாக அவர் நேற்று தெரிவித்துள்ளார்.

ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழு கூட்டத்துக்கு வந்த பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்கள், மஹிந்த ராஜபக்ஷவின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தனர். மஹிந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக அண்மையில் வெளியான செய்திகள் குறித்தும் வினவியுள்ளனர். “நானும் வீட்டிலிருந்து அந்த செய்திகளைப் பார்த்தேன்.

அவை அப்பட்டமான பொய். நான் நலமாக உள்ளேன். அரசியல் பணிகள் வழக்கம் போல் தொடங்குவேன். எதற்கும் பயப்பட வேண்டாம்” என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »