Our Feeds


Tuesday, July 12, 2022

SHAHNI RAMEES

குடும்பத்தினர் நாட்டை விட்டு வெளியேறும் வரை ராஜிநாமா இல்லை: கோட்டா தெரிவித்துள்ளதாக ‘இந்தியா டுடே’ தகவல்.



ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

– தனது குடும்பத்தினர் நாட்டை விட்டு வெளியேறும் வரை ராஜினாமா செய்யப் போவதில்லை என்று சூசகமாகத் தெரிவித்துள்ளதாக இந்தியா ருடே செய்தி வெளியிட்டுள்ளது.


இது தொடர்பில் எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்றும், ஆனால் இதுவரை எந்தக் கட்சியும் இதனை ஏற்கத் தயாராக இல்லை எனவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மூன்று நாட்களுக்கு முன்னர், சபாநாயகரிடம் ஜனாதிபதி பேசி, புதன்கிழமை பதவி விலகுவதாக அறிவித்தார். இருப்பினும், கடந்த 40 மணி நேரத்தில், அவர் புதன்கிழமை ராஜினாமா செய்வது குறித்து எதுவும் குறிப்பிடவில்லை.


கோட்டாபய ராஜபக்ஷ – தனது ராஜினாமா கடிதத்தை அனுப்புவதற்கு முன்பு, அவரும் அவருடைய குடும்பத்தினரும் நாட்டை விட்டு வெளியேற பாதுகாப்பான வழியை எதிர்பார்க்கிறார்.


ஜனாதிபதியின் சகோதரர் பசில் ராஜபக்ஷ, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பிரமுகர் புறப்படும் இடத்தில் வைத்து, குடிவரவு திணைக்களம் மற்றும் விமான நிலைய ஊழியர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார்.


இந்த நிலையில் ராஜபக்ஷவினர் நாட்டை விட்டும் வெளியேறுவதைத் தடுக்க, பட்டுப்பாதை பிரமுகர் முனையத்தில் உள்ள அனைத்து ஊழியர்களும் சேவைகளிலிருந்து விலகியுள்ளனர்.


ஜனாதிபதி நாளை பதவி விலகாவிட்டால், கொழும்பில் நிலைமை மேலும் மோசமடைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »