Our Feeds


Tuesday, July 5, 2022

ShortNews

லிட்ரோ எரிவாயு கப்பல் நாட்டை வந்தடைவதில் தாமதமேற்படுமாம்!



லிட்ரோ எரிவாயு நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்படவுள்ள 3,700 மெட்ரிக் தொன் எரிவாயு கொண்ட கப்பல் நாளை 6ஆம் திகதிக்கும் 8 ஆம் திகதிக்குமிடையில் இலங்கைக்கு வரவிருந்த நிலையில் அதன் வருகை தாமதமாகும் லிட்ரோ நிறுவனத்தின் நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


காலநிலை பிரச்சினை காரணமாக கப்பல் வர தாமதமேற்பட்டுள்ளதாகவும் இம்மாதம் 9ஆம் திகதி வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »