Our Feeds


Tuesday, July 12, 2022

SHAHNI RAMEES

இலங்கைக்கான சேவைகளை இடைநிறுத்தியது ‘Flydubai”

 

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் ப்ளை டுபாய் நிறுவனமானது இலங்கைக்கான விமான சேவைகளை இடைநிறுத்தியுள்ளது.

இலங்கையின் நெருக்கடி நிலை காரணமாக இந்த தீர்மானத்தை எடுத்ததுடன், இந்த மாதம் 10ஆம் திகதியிலிருந்து மீள அறிவித்தல் வரை டுபாய்- கொழும்புக்கான விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அந்த நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவரை மேற்கோளிட்டு, சர்வதேச ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

இவ்வாறு இடைநிறுத்தப்பட்ட விமான சேவைகளில் விமான பயணச் சீட்டுகளைப் பெற்றுக்கொண்டவர்களுக்கான கட்டணங்கள் பயணிகளிடம் மீள கையளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »