Our Feeds


Monday, August 8, 2022

SHAHNI RAMEES

20 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது...!


கிராண்ட்பாஸ் பகுதியில் 20 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருளுடன் பெண் ஒருவர் இன்று (8) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருபவர் எனவும், இந்நிலையில் நபரொருவருக்கு பெருமளவான போதைப்பொருள் விற்பனை செய்யவதற்கு தயாராகி வந்தபோது பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சந்தேகநபர் குடியிருப்பு தொகுதியின் மூன்றாவது மாடியில் வைத்து கைது செய்யப்பட்டதோடு, மேலும் அவரை சோதனைக்குட்படுத்திய போது சுமார் 83 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 40 வயதுடைய பெண் என பொலிஸார் தெரிவித்தனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »