கடந்த மே மாதம் பிலியந்தலை பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற 6 கலவர சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் கெஸ்பேவ பகுதி அமைப்பாளர் கயான் த மெல் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (08) கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.