Our Feeds


Friday, August 19, 2022

SHAHNI RAMEES

சூடானில் கனமழை : 70க்கும் அதிகமானோர் உயிரிழப்பு


 சூடானில் கடந்த மே முதல் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 70இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், 10,000இற்கும் மேற்பட்ட வீடுகள் கடும் சேதமடைந்துள்ளன.


வடக்கு கோர்டோஃபான், நைல் ஆறு பகுதிகள் கனமழையால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. கிழக்கு சூடானில் 1 இலட்சத்து 36,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வெள்ளத்தினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் எனவும் ஐநா தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »