காலி – பூஸ்ஸ பகுதியில் இன்று காலை ருஹுணு குமாரி ரயில் தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
இதனால் கடலோர ரயில் சேவை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில் போக்குவரத்து அத்தியட்சகர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த ரயிலை தடமேற்றும் பணிகள் விரைவாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தொடருந்து கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.