Our Feeds


Wednesday, August 17, 2022

SHAHNI RAMEES

சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு வளாகத்தை மீண்டும் ஆரம்பிக்க எதிர்பார்ப்பு – கஞ்சன


 கச்சா எண்ணெயின் தொடர்ச்சியான விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு வளாகத்தை இந்த வாரத்தில் இருந்து மீண்டும் ஆரம்பிக்க எதிர்ப்பார்த்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.


இது தொடர்பில் இன்று (17) காலை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடியதாக அவர் ட்விட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.


மேலும், செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான திட்டங்கள் குறித்தும் அங்கு விவாதிக்கப்பட்டதாக அந்த ட்வீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »