Our Feeds


Friday, August 19, 2022

SHAHNI RAMEES

ஐ.நா. சபை பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு


 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளுக்கும் இடையில் முக்கிய சந்திப்பு நடைபெற்றுள்ளது. 


ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை நடைபெற்ற இந்தச் சந்திப்பில் ஐக்கிய நாடுகளின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்துக்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்கான பெங்கொக் அலுவலகத்தின் பணிப்பாளர் டேவிட் மஸ்னெக்யன் கார் (David Mclachlan-Karr), ஐக்கிய நாடுகளின் நிரந்தர பிரதிநிதி ஹெனா சிங்கர் (Hanaa Singer) மற்றும் ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தின் பிரதானி ஆண்ட்ரியாஸ் கர்பாதி (Andreas Karpati) ஆகியோர் கலந்துகொண்டனர். 


ஜனாதிபதியின் சர்வதேச விவகாரப் பணிப்பாளர் தினுக் கொலம்பகே, ஜனாதிபதியின் இளைஞர் மற்றும் நிலையான அபிவிருத்தி விவகாரப் பணிப்பாளர் ரந்துல அபேதீர ஆகியோரும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »