அமெரிக்க டொலர் தருவதாகக் கூறி ஐந்தரை கோடி
ரூபா பண மோசடி செய்தார்கள் எனக் கூறப்படும் இருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.தனியார் நிறுவனமொன்றைச் சேர்ந்த பணிப்பாளர் மற்றும் பெண் பணிப்பாளர் ஆகியோரே கைது செய்யப்பட்டவர்களாவர்.
சந்தேக நபர்களைக் கோட்டை நீதிவான் திலின கமகே முன்னிலையில் நேற்று (22) ஆஜர் செய்தபோது இம்மாதம் 31 ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்க உத்தரவிட்டார்.
சந்தேக நபர்கள் கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தபோது குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
சந்தேக நபர்கள் அமெரிக்க டொலர்களை தருவதாக கூறி இரண்டு பெறுமதியான காசோலைகளை வழங்கியுள்ளதாகவும் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு ஐந்து வருடங்களின் பின்னர் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.