Our Feeds


Tuesday, August 30, 2022

SHAHNI RAMEES

தொடர் மழை காரணமாக நாட்டின் பல பிரதேசங்களில் வெள்ள அபாயம்


 நாட்டின் பல பிரதேசங்களில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் நிலையேற்பட்டுள்ளதாக நீர்பாசன திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.


அத்தனகலுஓயா, களு கங்கை, களனி கங்கை,ஜின் கங்கை,நில்வலா கங்கை மற்றும் மகாவலி ஆகிய ஆற்றுப் படுகைகளில் அடுத்த சில நாட்களில் நீர் மட்டம் உயரும் என திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட வானிலை ஆலோசனைகள் மற்றும் முன்னறிவிக்கப்பட்ட வானிலை தொடர்பான தகவல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இந்த நிலைமையை கருத்திற்கொண்டு குறித்த ஆற்றுப்படுகைகளில் வெள்ளம் ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் அவதானமாக இருக்குமாறு திணைக்களம் கேட்டுக்கொள்கின்றது.


மதிப்புமிக்க உயிர்கள் மற்றும் உடைமைகளைப் பாதுகாப்பதற்காக அந்த நதிகளையும் (படகுகளில் சவாரி செய்வது குளிப்பது நதிகளைக் கடப்பது போன்றவை) மற்றும் அவற்றின் துணை நதிகளைப் பயன்படுத்தும்போது குறிப்பாக அந்த ஆற்றுப் படுகைகளின் மேல்நிலைப் பகுதிகளில் பயன்படுத்தும்போது பொதுமக்கள் சிறப்பு கவனம் செலுத்துமாறும் திணைக்களம் கோரியுள்ளது

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »