300 நுகர்வுப் பொருட்களின் இறக்குமதியை தடை செய்ய அரசாங்கம் தீர்மானித்ததைத் தொடர்ந்து, பிரதான இறக்குமதியாளர்கள் அறிவித்த விலைக்கு இணங்க கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் உபகரணங்களின் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை தொடர்பாடல் உரிமையாளர்கள் சங்கம் (ACCOA) இன்று தெரிவித்துள்ளது.
தற்போதைய கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் உபகரணங்களின் விலைகள் இதுவரை கண்டிராத அளவிற்கு உயரும் என ACCOA தலைவர் இந்திரஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.