நாவலப்பிடிய- சேலம்பிரிஜில் நடைப்பெற்ற பாரிய
வெள்ள அனர்த்த நிவாரணப் பணி..!SELAMBRIDGE WELFARE SOCIETY,
SELAMBRIDGE JUMMA MOSQUE,
SELAMBRIDGE YOUTH FOUNDATION,
ACJU- NAWALAPITIYA BRANCH,
NRCC & CENTRAL COUNCIL- NAWALAPITIYA
ஆகியவற்றின் ஏற்பாட்டில்
அண்மையில் நாவலப்பிடியில் ஏற்பட்ட பாரிய வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 138 குடும்பங்களுக்கு 2022/08/17 அன்று இன,மத,மொழி பேதமின்றி அனைவருக்கும் வீட்டுப் பாவனை உபகரணங்கள் வழங்கப்பட்டதுடன் இந்நிகழ்வில் சர்வ மத தலைவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இந்த நற்பணிக்காக அனைத்து விதங்களிலும் உதவி, ஒத்துழைப்புக்களை வழங்கிய நல்லுள்ளங்கள் அனைவருக்கும் எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக...!
(தான தர்மங்கள் செய்வதினால்) வறுமை உண்டாகிவிடும் என்று அதைக் கொண்டு உங்களை ஷைத்தான் பயமுறுத்துகிறான்; ஒழுக்கமில்லாச் செயல்களைச் செய்யுமாறும் உங்களை ஏவுகிறான்; ஆனால் அல்லாஹ்வோ, நீங்கள் தான தருமங்கள் செய்தால் தன்னிடமிருந்து மன்னிப்பும், (அருளும், பொருளும்) மிக்க செல்வமும் கிடைக்கும் என்று வாக்களிக்கின்றான்; நிச்சயமாக அல்லாஹ் விசாலமான கொடையுடையவன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் : 2:268)