Our Feeds


Friday, August 19, 2022

SHAHNI RAMEES

#VIDEO: பொலிஸாருக்கு பயந்து வாவிக்குள் குதித்த இளைஞன் சடலமாக மீட்பு...!




பொலிஸார் சோதனை செய்ய முற்பட்ட போது அதிலிருந்து

தப்பிப்பதற்காக வாவியில் குதித்த இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.


இந்த சம்பவம் குருநாகல் பகுதியில் இன்று (19) காலை இடம்பெற்றுள்ளது.


குருநாகல் வாவிக்கு அருகாமையில் வசித்து வரும் இளைஞர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்வதற்கு பொலிஸார் முயற்சித்துள்ளனர். இதன்போது விரைந்து செயற்பட்ட அந்த இளைஞர் அங்கிருந்து தப்பிச் செல்வதற்காக வாவிக்குள் குதித்து காணாமல் போயுள்ளார்.


பொலிஸ் உயிர்காக்கும் பிரிவினர் வாவிக்குள் குதித்து மேற்கொண்ட தேடுதலுக்கு பின்னர் இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.


பின்னர் பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் போது உயிரிழந்த இளைஞனின் கையில் இருந்து போதைப்பொருள் பொதியொன்று கண்டுபிடிக்கப்பட்டது.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குருநாகல் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »