கொழும்பு புறநகர் பகுதியான களனி – பட்டிவில நீர் சுத்திகரிப்பு நிலையத்தை அண்மித்து அமைந்துள்ள சிறிய பாலத்தின் மீது கனரக வாகனங்களை செலுத்த வேண்டாம் என இடர் முகாமைத்துவ நிலையம் சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அதிக மழையுடனான வானிலையை அடுத்து, குறித்த பாலத்தை அண்மித்த பகுதியில் அதிகளவான வெள்ள நீர் கடந்து செல்வதினால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.
மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு கோரிக்கை விடுப்பதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம், வாகன சாரதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளது.