Our Feeds


Sunday, November 20, 2022

ShortNews Admin

நீர்கொழும்பில் மூன்று விபசார விடுதிகள் சுற்றிவளைப்பு: 8 பேர் கைது



(எம்.வை.எம்.சியாம்)


நீர்கொழும்பின் மூன்று வெவ்வேறு பகுதிகளில் சேவை மத்திய நிலையமாக இயங்கிவந்த விபசார விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டதில் 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

குறித்த சந்தேக நபர்கள் நேற்று சனிக்கிழமை (நவ 19) பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய குறித்த மூன்று வெவ்வேறு பகுதிகளில் இயங்கிவந்த விபசார விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டதில், நிலைய முகாமையாளர் உள்ளிட்ட 8 பேரே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சந்தேக நபர்கள் 21 முதல் 46 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும், அவர்கள் மாரவில, பாணந்துறை, பிடிக்கல, ஹாலிஎல, வெல்லவான, பெல்தொட மற்றும் மஹபொதநெவ பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »