Our Feeds


Sunday, November 6, 2022

ShortTalk

பெலவத்தை வீடொன்றில் பெண் கொலை: உடைமைகள் கொள்ளை: இருவர் கைது



த்தரமுல்ல பெலவத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் தனியாக இருந்த பெண்ணின் கழுத்தை நெரித்து கொலைசெய்து, அவரது உடைமைகளை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் கடந்த ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. 

இந்நிலையில் இந்த குற்றச் செயல்களின் பின்னணியில் தொடர்புபட்டுள்ளதாக கூறப்படும் முச்சக்கரவண்டி, கொள்ளையிடப்பட்ட எரிவாயு சிலிண்டர், கைக்கடிகாரம் உட்பட பல பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 

மேலும், கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் 31 மற்றும் 38 வயதுடைய, தலங்கம பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர்.

இக்குற்றச் செயல்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »