Our Feeds


Sunday, November 6, 2022

ShortTalk

தனுஷ்க குணரத்னவின் பாலியல் சர்ச்சைக்கு மத்தியில் மேலுமெரு சர்சையும் வெடித்தது.



உலகக் கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டிகளுக்காக அவுஸ்திரேலியாவிற்கு விஜயம்; மேற்கொண்டு, அங்கு உபாதைக்குள்ளான தனுஷ்க குணதிலக்க, தொடர்ந்தும் அவுஸ்திரேலியாவில் தங்க வைக்கப்பட்டமை தொடர்பில் தற்போது பாரிய சர்ச்சையை ஏற்பட்டுள்ளது.


இந்த விடயம் தொடர்பில் உடனடி தெளிவூட்டல்களை வழங்குமாறு, விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர், ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திடம் கோரியுள்ளதாக, ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் செயலாளர் அமல் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

உலகக் கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய நிலையில், தனுஷ்க குணதிலக்க உபாதைக்கு உள்ளாகியிருந்தார்.

தனுஷ்க குணதிலக்கவிற்கு பதிலாக அசோக் பண்டார அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டார்.

எனினும், உபாதைக்குள்ளான தனுஷ்க குணதிலக்க இலங்கைக்கு மீள வரவழைக்கப்படவில்லை என கூறப்படுகின்றது.

அவுஸ்திரேலியாவில் கடந்த 2ம் திகதி யுவதியொருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்த குற்றச்சாட்டின் கீழ் தனுஷ்க குணதிலக்க இன்று (நவ.06) அதிகாலை அந்த நாட்டு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »