Our Feeds


Wednesday, November 2, 2022

RilmiFaleel

டொலர் பெற்றுக்கொள்ள இலங்கை அரசின் விசேட திட்டம்!



இலங்கையில் உள்ள வீடுகளை, வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு, டொலர்களுக்கு விற்பனை செய்யும் முறைமையின்கீழ் அரசாங்கம் ஒரு இலட்சத்து 43 ஆயிரத்து 700 அமெரிக்க டொலர்களை ஈட்டியுள்ளது.

பன்னிப்பிட்டி – வியத்புர, கொட்டாவ மற்றும் மாலபே முதலான பகுதிகளில் உள்ள, நகர அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான வீடமைப்புத் தொகுதியில் உள்ள 3 வீடுகளே இவ்வாறு விற்பனை செய்யப்பட்டுள்ளன.

மேலும் 10 வீடுகளைக் கொள்வனவு செய்ய, வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர்.

அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, பிரித்தானியா, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் பங்களாதேஷ் முதலான நாடுகளில் வசிக்கும் இலங்கையர்களினால் இந்த விண்ணப்பங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »