இலங்கையில் உள்ள வீடுகளை, வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு, டொலர்களுக்கு விற்பனை செய்யும் முறைமையின்கீழ் அரசாங்கம் ஒரு இலட்சத்து 43 ஆயிரத்து 700 அமெரிக்க டொலர்களை ஈட்டியுள்ளது.
பன்னிப்பிட்டி – வியத்புர, கொட்டாவ மற்றும் மாலபே முதலான பகுதிகளில் உள்ள, நகர அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான வீடமைப்புத் தொகுதியில் உள்ள 3 வீடுகளே இவ்வாறு விற்பனை செய்யப்பட்டுள்ளன.மேலும் 10 வீடுகளைக் கொள்வனவு செய்ய, வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர்.
அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, பிரித்தானியா, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் பங்களாதேஷ் முதலான நாடுகளில் வசிக்கும் இலங்கையர்களினால் இந்த விண்ணப்பங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.