Our Feeds


Wednesday, November 2, 2022

ShortNews

கொழும்பு ஆர்ப்பாட்டம் - இடைநடுவில் இரண்டாக உடைந்த போராட்டக்காரர்கள்.



இன்று மாலை மருதானையில் ஆரம்பமான அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம் புறக்கோட்டை நோக்கிச் சென்றது.


மருதானையில் ஆரம்பித்து டெக்னிக்கல் சந்தியின் ஊடாக கோட்டையை நோக்கி சென்றுக்கொண்டிருந்த போராட்டத்தில், புறக்கோட்டை வீதியை பொலிஸார் வழிமறித்திருந்தனர்.

இதனால் போராட்டத்தில் கலந்துகொண்டவர்களில் பலர் கலைந்து சென்றதோடு, ஆரம்பிக்கப்பட்ட போது இருந்த கூட்டம் இடைநடுவில் பாதியாக குறைந்துள்ளது.

புறக்கோட்டை வீதியை பொலிஸார் வழிமறித்த போது, பொலிஸாருடன் விசேட அதிரடிப்படையினரும் கலகமடக்கும் பொலிஸாரும், ஆயுதமேந்திய ​இராணுவத்தினரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »