Our Feeds


Saturday, November 26, 2022

ShortTalk

உலகக்கிண்ண உதைபந்து தொடரிலிருந்து மொத்தமாக வெளியேறியது கட்டார் - கட்டார் ரசிகர்கள் அதிர்ச்சி.



2022 உலகக்கிண்ண உதைபந்து தொடரில், தற்போது லீக் சுற்றுகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த போட்டியை நடத்தும் கட்டார் அணி, இந்த தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.


காட்டாரின் முதல் போட்டியில் ஈக்வடாரிடம் 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. உலகக்கிண்ண உதைபந்து வரலாற்றில் போட்டியை நடத்தும் அணி முதல் போட்டியிலேயே தோல்வியடைந்தது இதுவே முதல் முறையாகும்.

இதனை தொடர்ந்து, 2-வது லீக் சுற்றில் செனக்கல் அணியை எதிர் கொண்ட கட்டார் 1-3 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவியது. அடுத்ததாக செவ்வாய்கிழமை நெதர்லாந்து அணியை கட்டார் எதிர்கொள்கிறது.

எனினும் முதல் 2 போட்டிகளில் தோல்வியடைந்ததால் குரூப் ஏ பிரிவு புள்ளிப் பட்டியலில் கடைசி இடம் பிடித்த கட்டார் அணி, அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்ததுடன், உலகக் கிண்ணத் தொடரிலும் இருந்து வெளியேறி உள்ளது. இது கட்டார் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »