பாகிஸ்தான் நம்ம தென்னாசிய நாடு. நன்றாக இருந்திருக்க வேண்டிய வளமான நாடு. தூரதிஷ்டவசமாக பல காலமாக இந்நாடு நிம்மதியாக இருந்ததே இல்லை. அடிப்படைவாதம், இனவாதம், மதவாதம், tribalism, பயங்கரவாதம் மற்றும் முக்கியமாக இராணுவவாதம் காரணமாக நாடு முன்னேற முடியாமல் தவிக்கிறது.
இந்நாட்டிலிருந்து பிரிந்த வங்காள தேசத்தின் சடுதி வளர்ச்சியை பார்த்தும் இந்நாட்டு பயங்கரவாதிகளுக்கு புத்தி வரவில்லை.
பதவிக்கு வந்தவர்களில் இம்ரான் ஒப்பீட்டளவில் நவீன சிந்தனை கொண்ட முற்போக்காளர். அவர் முயற்சித்து நாட்டை முன்னேற்றுவார் என்று பார்த்தால், அவரையும் பதவியில் இருந்து துரத்தினார்கள்.
இப்போது எதிரணியில் அவரது செல்வாக்கு உயர்கிறது. அதை கண்டு, அவர் மீண்டும் பதவிக்கு வராமல் தடுக்க, பெனாசிரை போல் அவரையும் போட்டுத்தள்ள பார்க்கிறார்கள்.