ஊழலிற்கு எதிரான முன்னணியின் இயக்குநர் நாமல்குமார பெண்ணொருவரை பாலியல் ரீதியில் துன்புறுத்திய குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
வரக்காலபொல பொலிஸாரிடம் பெண்ணொருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நாமல்குமார தனது வீட்டில்வைத்து தன்னை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியுள்ளார் என குறிப்பிட்ட பெண் முறைப்பாடு செய்துள்ளார்.
அவரை தான் வீட்டிலிருந்து இழுத்துவந்து மரத்தில் கட்டி தாக்கினேன் என அந்த பெண் தெரிவித்துள்ளார்.
நாமல்குமார கதிரையில் கட்டப்பட்டிருக்கும் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.