Our Feeds


Sunday, November 6, 2022

ShortTalk

தனக்கு பிறந்த பெண் குழந்தைக்கு பதிலாக ஆண் குழந்தையை மாற்றிய தாய் கைது.



தனதுக்குப் பிறந்த பெண் சிசுவுக்கு பதிலாக ஆண் சிசுவை மாற்றி எடுத்துச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய, தாயொருவர் நேற்று (05) கைது செய்யப்பட்டுள்ளார்.


அனுராதபுரம் போதனை வைத்தியசாலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அனுராதபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அந்தத் தாய், பதவியவைச் சேர்ந்த 32 வயதானவர் ஆவார்.


கைது செய்யப்பட்ட தாயும், கலன் பிந்துனுவைச் சேர்ந்த 42 வயதான தாயும் ஒரேநாளில் சிசுக்களைப் பிரசவித்துள்ளனர்.


பிரசவத்துக்குப் பின்னர் இரண்டு சிசுகளும் சூடான இடத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.


இந்நிலையில், தனக்குப் பிறந்த ஆண் குழந்தையை, பதவியைச் சேர்ந்த தாய் மாற்றிக்கொண்டார் என கலன் பிந்துனுவைச் சேர்ந்த தாய் முறைப்பாடு செய்துள்ளார்.


அந்த முறைப்பாட்டுக்கு அமைய கைது செய்யப்பட்ட தாய்,  1 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் விடுதலைச் செய்யப்பட்டுள்ளார். வழக்கு 2023 மே மாதம் 22 ஆம் திகதியன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.


சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் பொலிஸின் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவின் பொறுப்பதிகாரி டப்ளியு பஸ்நாயக்க உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.  

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »