Our Feeds


Monday, November 28, 2022

ShortNews

ஐ.நா. தலைமையகத்தில் மகாத்மா காந்தியின் சிலை



ஐ.நா. பாதுகாப்பு துறை தலைவர் பொறுப்பை இந்தியா அடுத்த மாதம் (டிசம்பர்) ஏற்கிறது. இதையொட்டி மகாத்மா காந்தியின் மார்பளவு சிலை ஒன்றை ஐ.நா.வுக்கு இந்தியா பரிசளித்துள்ளது.


இந்த சிலை ஐ.நா. தலைமையகத்தின் வடபகுதியில் உள்ள புல்வெளியில் நிறுவப்படுகிறது. அடுத்த மாதம் 14 ஆம் திகதி மத்திய வெளியுறவு அமைச்சர் ஐ.நா. செல்லவுள்ள நிலையில். அப்போது இந்த சிலை திறக்கப்படுகிறது.

இந்த சிலை திறப்பு விழாவில் ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் மற்றும் பாதுகாப்பு துறையின் 15 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேசத்தந்தை மகாத்மாவின் இந்த சிலையை புகழ்பெற்ற சிற்பியும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான ராம் சுதர் வடிவமைத்துள்ளார்.

இதன் மூலம் ஐ.நா. தலைமையகத்தில் முதல் முறையாக மகாத்மா காந்தி சிலை இடம்பெறுகிறது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »