Our Feeds


Sunday, November 6, 2022

News Editor

ஓய்வுபெறும் அரச அதிகாரிகளுக்கு இனி வாகனங்கள் இல்லை!


 

அரச நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் ஓய்வுபெறும்போது, அவர்கள் பயன்படுத்திய உத்தியோகபூர்வ வாகனங்களை அவர்களிடமே ஒப்படைக்கும் முறைமையை நிறுத்துமாறு , அரச நிறுவனங்களுக்கு திறைசேரி உத்தரவு பிறப்பித்துள்ளது.

திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன இது தொடர்பான சுற்றறிக்கையை, அமைச்சு செயலாளர்கள் மற்றும் அரச வங்கிகள், கூட்டுத்தாபனங்கள், சபைகள் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு அனுப்பியுள்ளார்.

ஓய்வு பெறும்போது உத்தியோகபூர்வ வாகனங்களின் உரிமையை அரச நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு மாற்றுவது தொடர்பில் அரச நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்றக் குழுவில் (கோப்) எழுந்த கேள்விகளையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

வாகனங்களை மாற்றுவதில் அரசுடைமை நிறுவனங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அனைத்து உள் கொள்கைகளையும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நிறுத்த நிதி அமைச்சு முடிவு செய்துள்ளதாக அந்த சுற்றறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »