Our Feeds


Sunday, November 6, 2022

ShortTalk

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய இலங்கை வீரர் தனுஷ்க குணதிலக்கவிற்கு பிணை வழங்க அவுஸ்திரேலிய நீதிமன்றம் மறுப்பு!





பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்கவிற்கு, பிணை வழங்க அவுஸ்திரேலிய நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.


பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்தமை உள்ளிட்ட 4 குற்றச்சாட்டுக்களின் கீழ், யுவதியொருவரினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட தனுஷ்க குணதிலக்க, சிட்னி சிட்டி பொலிஸாரினால் பெரமேட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குற்றச்சாட்டுக்களை ஆராய்ந்த நீதவான், தனுஷ்க குணதிலக்கவிற்கு பிணை வழங்க மறுப்பு தெரிவித்துள்ளதாக அந்த நாட்டு  ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »