Our Feeds


Friday, November 11, 2022

ShortTalk

சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்த இரு இளைஞர்கள் தப்பியோட்டம் : சிறுமி உயிரிழப்பு



இரு  இளைஞர்களால் கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 15 வயதான சிறுமி ஒருவர் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்த இரு இளைஞர்களும் சிறிது நேரத்திலேயே வைத்தியசாலையில் இருந்து காணாமல் போயுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர்  தெரிவித்துள்ளார். 

குறித்த சிறுமியை இரு இளைஞர்கள் காரில் வைத்தியசாலைக்கு கொண்டு வந்ததாகவும் சிறுமியை உடனடியாக பரிசோதித்த மருத்துவர் உயிரிழந்துள்ளமையை உறுதிப்படுத்தியதாகவும்  வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தச் சிறுமியின் முகத்திலும் உடலிலும் காயங்கள் இருந்ததை அவதானித்ததாகவும் பேச்சாளர் குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »