Our Feeds


Friday, December 16, 2022

ShortTalk

தனது மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய தந்தைக்கு வழங்கப்பட்ட அதிரடி தீர்ப்பு



முல்லைத்தீவு – மாங்குளம் பகுதியில் தனது மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய ஒருவருக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.


உலக நீதி, இயற்கை நியதி மற்றும் சமூக நீதிக்கு முரணான வகையில், குற்றச்செயலில் ஈடுபட்ட நபருக்கு கடும் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என மேல் நீதிமன்ற நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்டுள்ள சிறுமிக்கு 3 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கப்பட வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மாங்குளத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தனது 11 வயது மகளை தந்தை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.

பாதிக்கப்பட்ட சிறுமி வழங்கிய சாட்சியம் மற்றும் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை ஆகியவற்றின் அடிப்படையில், குற்றவாளிக்கு 15 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 15,000 ரூபா அபராதம் செலுத்தப்பட வேண்டும் எனவும் குற்றவாளிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கான இழப்பீட்டுத் தொகையை செலுத்தத் தவறும் பட்சத்தில், மேலும் 9 மாதங்களும் அபராதத்தை செலுத்தத் தவறும் பட்சத்தில் 03 மாதங்களும் கடூழிய சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »