இந்திய நாடாளுமன்றத்தின் கீழவையான லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, எம்.பி.,க்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
சீனாவில் பரவி வரும் பிஎப் 7 கொரோனா தொற்று குஜராத், ஒடிசா மாநிலங்களில் மொத்தம் 4 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, எம்.பி.க்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், மற்றும் எம்.பி.க்கள் முகக்கவசம் அணிந்து நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்றனர்.