பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்னவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியமில்லை என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கடந்த 10ஆம் திகதி அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் கட்டுப்பணத்தை ஏற்க வேண்டாம் என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் நாட்டிலுள்ள உள்ள சகல மாவட்டச் செயலாளர்களுக்கும் கடிதம் மூலம் அறிவித்திருந்தார்.
எனினும், பின்னர் உரிய கடிதத்தை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அத்துடன், தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்த அழைப்பின் பேரில் கடந்த 13ஆம் திகதி வாக்குமூலம் வழங்குவதற்காக அங்குச் சென்ற பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் மன்னிப்புக் கோரியிருந்தார்.