Our Feeds


Wednesday, February 8, 2023

SHAHNI RAMEES

பாகிஸ்தானில் கோர விபத்து : 30 பேர் உயிரிழப்பு..!




 பாகிஸ்தான் நாட்டின் கில்கித்-பல்திஸ்தான் மாகாணம்

கில்கித்தில் இருந்து ராவல்பெண்டி நோக்கி நேற்று இரவு பயணிகள் பேருந்து சென்று கொண்டிருந்தது. 




டைமிர் மாவட்டம் ஷதில் பகுதியில் மலைப்பாங்கான சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த கார் மீது பேருந்து நேருக்கு நேர் பயங்கரமாக மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.




இந்த கோர விபத்தில் பேருந்தும், காரும் மலையில் இருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்தது. குறித்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 30 பேர் உயிரிழந்தனர்.




மேலும் ,படுகாயமடைந்த பலர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.




இந்த கோர விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணையை நடத்தி வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »