Our Feeds


Tuesday, February 28, 2023

ShortNews

யாழில் 45 நாட்களேயான குழந்தை மர்மமான முறையில் உயிரிழப்பு ; மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பி வைப்பு



யாழ்ப்பாணம் பண்ணாகம் பகுதியை சேர்ந்த பிறந்து 45 நாட்களேயான ஆண் குழந்தையொன்று மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது. 


பால் குடித்து சிறிது நேரத்தில் குழந்தை மயக்கமுற்று உள்ளது. அதனை அடுத்து பெற்றோர் குழந்தையை யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர் . 

வைத்தியசாலையில் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. குழந்தையின் உயிரிழப்புக்கு காரணம் கண்டறியப்படாத நிலையில், உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைகளுக்காக கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »