Our Feeds


Tuesday, February 7, 2023

ShortTalk

தொடரும் பெரும் சோகம் - துருக்கி நிலநடுக்கம்- 5,000ஐ அண்மித்தது பலியானோரின் எண்ணிக்கை!



நிலநடுக்கத்தால் துருக்கி, சிரியா நாடுகள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளது. இதுவரை கிடைத்த தகவல் படி 4800 பேர் உயிரிழந்துள்ளனர். விரைவில் பலி எண்ணிக்கை 5,000ஐ கடந்துச்செல்லும் என மீட்பு படையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.


துருக்கியில் இன்று (7) மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. மத்திய துருக்கி பகுதியில் நிலநடுக்கம் ரிச்டர் அளவில் 5. 6 ஆக பதிவாகி உள்ளது. 


ஏற்கனவே நேற்று 3 முறை துருக்கியை நிலநடுக்கம் குலுக்கியதில் பல மாடி கட்டடங்கள் சரிந்தன. 


4,000இற்கும் மேலாக பலியானவர்களின் எண்ணிக்கை பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »