Our Feeds


Tuesday, March 7, 2023

News Editor

தென் அமெரிக்க நாடான பெருவில் கோர விபத்து : 13 பேர் பலி


 தென் அமெரிக்க நாடான பெருவின் பியூரா பகுதியில் இருந்து அதன் தலைநகரான லிமாவுக்கு சென்ற பேருந்து ஒன்று கோர விபத்தில் சிக்கியுள்ளது.


குறித்த இந்த பேருந்தில் சுமார் 50 பேர் பயணித்துள்ளனர். அன்காஷ் என்ற இடத்துக்கு அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது எதிரே வேகமாக ஒரு முச்சக்கரவண்டி ஒன்று வந்தது. அப்போது பேருந்தும், முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி கொண்டுள்ளது.


குறித்த விபத்தில் பேருந்தும், முச்சக்கரவண்டியும் தீப்பிடித்து எரிந்தது. இந்த கோர விபத்தில் 13 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.


இது குறித்து தகவலறிந்த பொலிஸார் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். 


விபத்தில் படுகாயம் அடைந்த 6 பேரை மீட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 


இந்த விபத்து தொடர்பாக பொலிஸார் பேருந்து சாரதியை கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »