Our Feeds


Saturday, March 4, 2023

SHAHNI RAMEES

16 ஆவது நிலக்கரி கப்பல் நாளை வருகிறது...!

 

மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை தடையின்றி இலங்கைக்கு கொண்டு வரப்படும் என இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனங்கள் ஊடாகவும் நிலக்கரித் தொகை இலங்கைக்கு கிடைத்துள்ளதாக நிலக்கரி நிறுவனத்தின் பொது முகாமையாளர் நாமல் ஹெவகே குறிப்பிட்டார்.

 

இதேவேளை, நிலக்கரி ஏற்றி வரும் 16வது கப்பல் நாளை (05) நாட்டை வந்தடைய உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »