விலைமனு வழங்குதற்காக
வர்த்தகர் ஒருவரிடம் ரூ. 3 மில்லியன் இலஞ்சம் கோரிய சம்பவம் தொடர்பில் குருணாகல் மாநகர சபையின் பிரதி மேயர் மொஹமட் அஷார்தீன் மொய்னுதீன், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேகநபர் பத்தரமுல்லையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் குறித்த பணத்தை பெறும் போது கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குருணாகல் பஸ் நிலையம் மற்றும் பொதுக் கழிப்பறைகளைச் சுத்தம் செய்வதற்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்காக பிரதி மேயர் இந்த இலஞ்சத்தைக் கோரியதாகத் தெரிவிக்கப்பட்டுகின்றது.
சந்தேகநபர் கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில், ரிஷாட் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
