Our Feeds


Thursday, March 16, 2023

ShortTalk

16 வயது மகன் தாக்கியதில் தந்தை உயிரிழப்பு! - பொலன்னறுவையில் அதிர்ச்சி!



பொலன்னறுவை பகுதியில் 16 வயது மகன் தாக்கியதில் படுகாயமடைந்த அவனது தந்தை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலன்னறுவ பொலிஸார் தெரிவித்தனர்.         

 

இச்சம்பவம் நேற்று 15 ஆம் திகதி அதிகாலை பொலன்னறுவை வேவதென்ன பகுதியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

 

சம்பவத்தில் உயிரிழந்தவர் 46 வயதுடய பொலன்னறுவை வேவதென்ன பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

உயிரிழந்த நபர் மதுபோதையில் வந்து தனது மனைவியை இரும்பு கம்பியொன்றினால் தாக்குவதற்கு முற்பட்டபோது அவரின் மகனும் மகளும் தலையிட்டு தடுப்பதற்கு முயற்சித்தபோது அவர்களையும் தாக்கியுள்ளதால் ஆத்திரமுற்ற மகன் தந்தையிடம் இருந்த இரும்பு கம்பியை பறித்து தாக்கியதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 

உயிரிழந்தவருடய சடலம் தற்போது பொலன்னறுவை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய மகனை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலன்னறுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

அநுராதபுரம் செய்தியாளர்    

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »