Our Feeds


Sunday, March 5, 2023

SHAHNI RAMEES

ஒக்சிஜன் உற்பத்தி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து : 5 பேர் பலி

 

பங்காளதேஷ் சிட்டகாங்க் மாவட்டம் கேஷப்பூர் பகுதியில் ஒக்சிஜன் உற்பத்தி தொழிற்சாலை உள்ளது. 



இந்த தொழிற்சாலையில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 



இந்த தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.



சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்பு படையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.



மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »